"ஆளுநர் உரை விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை" -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 1728

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பதிலுரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், ஆளுநர் உரையின் போது நிகழ்ந்தவற்றை அரசியலாக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருவதாக கூறி தனது பதிலுரையை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தனது உரையில், தமிழ்நாடு அரசை பாராட்டியிருப்பதாக கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை, காவல்துறையினர் சேகரித்து வருவதாகவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments